உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

பணிப்பகிஷ்கரிப்புக்கு ஆதரவு இல்லை – விசேட வைத்தியர்கள் சங்கம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
30 பார்வைகள்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (04) ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்புக்கு தங்களது ஆதரவு இல்லையென விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


விசேட வைத்தியர்கள் வழமை போன்று தங்களது கடமைகளை முன்னெடுப்பதுடன், வைத்தியசாலைகளின் விசேட மருத்துவ சேவைகள் தடையின்றி தொடரும் என சங்கத்தின் செயலாளர் வைத்திய நிபுணர் ஆர். ஞானசேகரம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மேலதிக பயிற்சி பெறும் விசேட வைத்தியர்களும் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பில் இணைவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


சுமார் 2,300 விசேட வைத்தியர்கள் சங்கத்தில் உள்ளதாகவும், அவர்கள் அனைவரும் வழமைபோல் பணியில் ஈடுபடுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் உயிரை பணையமாக வைத்து போராட்டத்தில் ஈடுபடுவது தங்களதுகொள்கையல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.


இதேவேளை, வைத்தியர்களின் நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களில் அரசியல் தலையீடு இடம்பெறுகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடு தழுவிய பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளது.


இன்று காலை 8.00 மணிக்கு தொடங்கிய இந்தப் போராட்டம் எப்போது நிறைவடையும் என்பது குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை. முன்பு கடந்த செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் ஒரு நாள் அடையாளப் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0