டீசல் விலை 600 ரூபாவாக உயர்த்த வேண்டிய அவசியம் – பொருளாதார நிபுணர்.!
உலக சந்தை நிலவரத்தை முன்னிட்டு, ஒரு லீற்றர் டீசலின் விலையை 600 ரூபாவாக உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர் தனனாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் ஒரு லீற்றர் டீசல் 382 ரூபாவாக விற்பனை செய்யப்படும் நிலையில், உலக சந்தை விலைகளின் அடிப்படையில் அந்த விலையில் தொடர்ந்து விற்பனை செய்வது சாத்தியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், டீசல் விலை உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளதாகவும், எனினும் சித்திரைப் புத்தாண்டைக் கருத்தில் கொண்டு தற்காலிகமாக விலை உயர்வு மேற்கொள்ளப்படாமல் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டிற்குப் பிறகு விலை உயர்வு இடம்பெற வாய்ப்புள்ளதாகவும்,விலை உயர்த்தப்படாவிட்டால் அரசாங்கம் மானியங்களை வழங்க வேண்டிய நிலை உருவாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், மானியங்கள் வழங்கப்பட்டால் அந்நிய செலாவணி கையிருப்புகளும் ரூபாயின் பெறுமதியும் பாதிக்கப்படக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.டீசல் விலை உயர்வு மக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தினாலும், நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டால் இது தவிர வேறு மாற்று வழி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.