படு கொ*லைத் திட்டம் முறியடிப்பு: 109 துப்பாக்கி ரவைகளுடன் நான்கு பேர் கைது.!
பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் தொடர்புடைய ‘கரந்தெனிய சுத்தா’வின் எதிரித் தரப்பு முக்கியஸ்தரை படுகொலை செய்யத் திட்டமிட்டிருந்த நான்கு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்பிட்டிய பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், ‘ராஜு’ எனப்படும் சனத் டி சில்வாவுக்குச் சொந்தமான வீட்டில் தங்கியிருந்தபோது இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப விசாரணைகளில், குறித்த நபர்கள் நீண்டகாலமாக இந்தக் கொலைத் திட்டத்தை முன்னெடுத்து வந்தமைவும், ஏற்கனவே பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களாகவும் இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட ஒருவரின் தகவலின் அடிப்படையில், மீட்டியாகொடை பகுதியில் உள்ள வீட்டின் பின்புறத்தில் புதைக்கப்பட்டிருந்த 109 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
இதில் ரி-56 வகை 96 ரவைகளும், 9 மில்லிமீட்டர் வகை 13 ரவைகளும் அடங்குகின்றன.சம்பவம் தொடர்பில் மீட்டியாகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.