உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

எதிர்க்கட்சி காட்டுகின்ற பூச்சாண்டி வேலைகளை மக்கள் நம்பப்போவதில்லை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
24 பார்வைகள்

இந்த காலகட்டத்திலும் சரி கடந்த காலகட்டத்திலும் சரி இந்த நாட்டு மக்கள் எப்போதுமே எதிர்பார்க்கும் காலங்களிலும் சரி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். எதிர்க்கட்சி காட்டுகின்ற இந்த பூச்சாண்டி வேலைகளை மக்கள் நம்பப் போவதில்லை என தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தொகுதியிலுள்ள பல கிராமங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை(03.04.2026) விஜயம் செய்த அவர் களுதாவளையில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்த நிலையில் உதயன் கம்பன்பில உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான புத்தகம் ஒன்றை அண்மையிலே வெளியிட்டிருந்தார். முன்னாள் ஜனாதிபதிகளும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவர்களும் கலந்து கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

கடந்த காலங்களில் சஜித் பிரேமதாச உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விடயங்களிலே இரட்டை நிலைப்பாடுகளிலே இருந்ததை நாங்கள் காணக்கூடியதாக இருந்தது. இந்த காலகட்டத்திலே முன்னாள் ஜனாதிபதிகளுடன் இணைந்து இந்த புத்தக வெளியீட்டிலே கலந்து கொண்டிருந்த விடயம் இப்போது மக்கள் மத்தியில் விமர்சனமாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.

எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவை எடுத்துக் கொண்டால் அவரது செயற்பாடுகள் இப்போது மக்கள் மத்தியிலேயும் அவரது கட்சிக்குள்ளேயும் விமர்சனங்களை உண்டு பண்ணிக் கொண்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது. தாக்குதல் நடவடிக்கையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கின்ற இந்த நேரத்திலே அவரது கட்சிக்குள்ளே இருக்கின்றவர்கள்கூட இந்த நிகழ்விலே அவர் கலந்து கொண்ட விடயம் தொடர்பாக ஒரு தரப்பினர் அவருக்கு சார்பாகவும் ஒரு தரப்பினர் அவருக்கு எதிராகவும் கருத்துகளை முன்வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஒரு சரியான நிலைப்பாடு அவரது கட்சிக்குள்ளேயே இல்லாத நிலைமைதான் தற்போது காணப்படுகின்றது.

ஐ.எம்.எப் தொடர்பாக இந்த நாட்டிலே ஒரு நிலைப்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த காலங்களிலேயே ஐ.எம்.எப் இன் கடன்களை பெற்று வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டிருந்தார் அதிக கடன் சுமைகள் மூலமாக மக்கள் அழுத்தத்திற்கு உள்ளாகின்றார்கள். ஐ.எம்.எப் இடம் கடனை பெற்றுக் கொண்டதன் பின்னர் இன்னும் ஒரு கருத்து தலைவர் வெளியிட்டு இருந்தார். இந்த நிதி மக்களுக்கு சார்பாகவும் சுமையாகவும் இல்லாமல் இலகுவான முறையிலே அதன் கடன்களை இலகுபடுத்த வேண்டும் எனவும் கருத்துக்களை வெளியிட்டு இருந்தார்.

மக்கள் மத்தியிலே ஒவ்வொரு கருத்துக்களை முன்வைத்துக் கொண்டிருக்கின்றார். ஆனால் அவரது செயற்பாடுகளை பார்க்கின்ற பொழுது அவர் இந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு பொருத்தமானவரா என்பதை சிந்திக்க வேண்டி இருக்கிறது.

தற்போது அரசாங்கம் சரியான பாதையில் முன்னெடுத்துக் கொண்டு வருகின்ற இந்த நேரத்தில் இருக்கின்ற குறைபாடுகளை எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்யலாம்.

ஆனால் இன்று இங்கே இருக்கின்ற எதிர்க்கட்சி இன மக்களை சிந்திக்கின்ற ஒரு கட்சியாக இல்லாமல் தங்களது சுயலாபங்களையும் தங்களது எதிர்கால ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்வதற்காகத்தான் எதிர்க்கட்சியாக தான் இப்போதும் இருந்து கொண்டிருக்கின்றது.

இந்த நாட்டு மக்கள் மீது அதிக நம்பிக்கையும், அக்கறையும் நாங்கள் வைத்திருக்கின்றோம். மக்களும் எங்களுக்கு பூரணமான ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த காலகட்டத்திலும்சரி கடந்த காலகட்டத்திலும்சரி இந்த நாட்டு மக்கள் எப்போதுமே எதிர்பார்க்கும் காலங்களிலும்சரி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். எதிர்க்கட்சி காட்டுகின்ற இந்த பூச்சாண்டி வேலைகளை மக்கள் நம்பப் போவதில்லை என அவர் இதன்போது தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

84 0 0