உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சாவகச்சேரி உள்ளூராட்சி மன்றத் தேர்தல்:இரு வழக்குகளிலும் இன்றும் தீர்ப்பு இல்லை!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
20 பார்வைகள்

சாவகச்சேரி பிரதேச சபை மற்றும் சாவகச்சேரி நகர சபை ஆகியவற்றுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல்களின் போது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை தள்ளுபடி செய்யக்கோரி தொடுக்கப்பட்ட வழக்குகளின் தீர்ப்பு யாழ்ப்பாணத்தில் இயங்கும் வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தில் இன்று வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் தீர்ப்பு இன்றும் வழங்கப்படவில்லை.

இந்த வழக்குகள் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி சூசைதாசன் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு முடிவடைந்து இருந்தது. தீர்ப்பு வழங்குவதற்காக ஏற்கனவே இரண்டு திகதிகள் குறிப்பிடப்பட்டு, அதன் பின்னரும் அந்த திகதிகளில் தீர்ப்பு வழங்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இன்றும் தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது. ஆனால் வழங்கப்படவில்லை.

இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்படுமா அல்லது வழக்கை விசாரித்த நீதிபதி சூசைதாசன் இந்த வழக்குகளின் மீதான தீர்ப்பை தாமே வழங்குவாரா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.

நீதிமன்றங்கள் புதுவருடத்தையொட்டி இன்றைய தினத்துடன் விடுமுறைக்காக மூடப்படுகின்றன. இனிமேல் ஏப்ரல் 23 ஆம் திகதிதான் நீதிமன்றங்கள் மீண்டும் கூட இருக்கின்றன. அப்படி இருக்கையில் 22ஆம் திகதி முதல் தமக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்துக்கு மாற்றம் வந்திருப்பதாக நீதிபதி சூசைதாசன் தெரிவித்தார்.

இந்த வழக்குகளுக்குத் தீர்ப்பு வழங்குமாறு தாம் விசேடமாகப் பணிக்கப்பட்டால் மட்டுமே நாம் வந்து இனிமேல் தீர்ப்பை வழங்க முடியும் என்று அவர் இன்று மன்றில் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

62 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

66 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

85 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

83 0 0