உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக இடை நிறுத்தம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
32 பார்வைகள்

மட்டக்களப்பு, குருக்கள்மடம் பகுதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகள் இன்று மாலையுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின்படி சந்தேகிக்கப்பட்ட இடத்தில் சுமார் 6 அடி ஆழம் வரை தோண்டப்பட்டபோதும், மனித உடல் எச்சங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதனால், தோண்டப்பட்ட பகுதி மீண்டும் மூடப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளது.மேலும், அகழ்வுப் பணிகள் இன்றுடன் நிறுத்தப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் சந்தேகிக்கப்படும் பிற இடங்கள் முதலில் ஸ்கேன் செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்ற அனுமதியுடன் மீண்டும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1990 ஆம் ஆண்டு மட்டக்களப்பு – கல்முனை வீதியில் பயணம் செய்த 170 முஸ்லிம்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாகவும், அவர்களின் உடல்கள் குருக்கள்மடம் கடற்கரை அருகில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

61 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

64 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

84 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

83 0 0