குளவிக் கொட்டுக்கு இலக்கான பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதி.!
கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறுக்கு ரம்பட பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் (கசிப்பு ) தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரம்பட பொலிஸ் குழுவினர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இச்சம்பவம் இன்று நண்பகல் முறுக்கு ரம்படயில் இடம்பெற்றுள்ளது.
இதில் படுகாயமடைந்த 3 பொலிஸார் 1990 சுவசரிய அம்புலன்ஸ் வாகனத்தில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் மேலும் 4 பேரும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இவர்களுள் இருவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு எஞ்சிய 5 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தானாக குளவிக் கூடு கலைந்ததா அல்லது கலைக்கப்பட்டதா என்பது தொடர்பான விசாரனைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

