உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

இலங்கை சாரணிய சங்கத்தின் பருத்தித்துறை மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு..!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
38 பார்வைகள்

இலங்கை சாரணிய சங்கத்தின் பருத்தித்துறை மாவட்ட அலுவலகம் திறப்பு விழா மாவட்ட ஆணையாளர் புவனேந்திரராசா தலைமையில் இன்று காலை 11:00 மணியளவில் பருத்தித்துறை கந்த உடையார் ஒழுங்கையிலுள்ள கருணை இல்லத்தில் இடம்பெற்றது.

இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து தேசிய கொடியினை நிகழ்வின் தலைவரும், சாரணிய சங்கத்தின் பதவி வழி தலைவருமான நடராசா திருலிங்கநாதான் அவர்கள் ஏற்றி வைத்ததை தொடர்ந்து சாரணிய கொடியை சாரணிய சங்கத்தின் மாவட்ட ஆணையாளர் ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து, சாரணிய சங்கத்தின் பெயர்ப்பலகையினை பருத்தித்துறை நகரபிதா வின்சன் டீ போல் டக்ளஸ் போல் திரை நீக்கம் செய்து வைத்தார். சங்க கட்டிடத்தினை வடமராட்சி கல்வி வலயத்தின் பிரதி கல்வி பணிப்பாளர் மோ.தெய்வேந்திரா நாடா வெட்டி சம்பிரதாய பூர்வமாக திறந்துவைத்தார்.

அதனை தொடர்ந்து கருத்துரைகளை பருத்தித்துறை மாவட்ட தலைவரும், வடமராட்சி வடக்கு பிரதேச செயலருமான நடராசா திருலிங்கநாதன், வடமராட்சி கல்வி வலயத்தின் பிரதி கல்வி பணிப்பாளர் மோ.தெய்வேந்திரா ஆகியோர் வழங்கினர்.

இந் நிகழ்வில் பருத்தித்துறை சாரணிய சங்கத்தின் ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், சாரணர்கள், பருத்தித்துறை நகர பிதா விசன்ட் டீ போல் டக்ளஸ் போல், வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் நடராசா திருலிங்கநாதன், உதவி பிரதேச செயலாளர் ப.தயானந்தன், பிரதேச செயலக கணக்காளர் ம. சிவகுமாரன், அதிபர்கள், ஆசிரியர்கள், ஆர்வலர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

56 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

59 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

81 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

76 0 0