உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

யூரியா உர விநியோகத்தில் கட்டுப்பாடு: நெற்செய்கைக்கு மாத்திரம் முன்னுரிமை!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
40 பார்வைகள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடிக் காரணமாக நாட்டுக்குள் யூரியா உரத்தின் கையிருப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், நடப்பு சிறுபோக நெற்செய்கை நடவடிக்கைகளுக்காக மாத்திரம் யூரியா உரத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


2026 சிறுபோக நெற்செய்கைக்கு கலக்கப்படாத யூரியா உரத்தை விவசாய சேவை நிலையங்கள் ஊடாக விநியோகிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு விவசாயியும் பயிரிடும் நிலப்பரப்பின் அளவுக்கு ஏற்ப மட்டுமே உரம் வழங்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.


உரக் கையிருப்பைச் சரியாக முகாமைத்துவம் செய்து, 2026 சிறுபோக நெற்செய்கை தடையின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக அனைத்து விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும்திணைக்களம் பணிப்புரை விடுத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளிடம் விசாரணை

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்றஅரசியல்வாதிகளிடம் விசாரணை இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள…

58 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மீனவர்கள் மூவர் கைது!

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்து…

37 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

46 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

68 0 0