உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கமல் அமரசிங்க.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
49 பார்வைகள்

மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கவை எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் ஒன்றிணைக்கப்பட்ட கெப் ரக வாகனமொன்று தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

இதன்போது, குறித்த வாகனத்தைப் பதிவு செய்வதற்காக அதன் சேஸ் இலக்கத்தை மாற்றி, போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து சான்றிதழ்களை பெற்றுக்கொண்டமை கண்டறியப்பட்டது.

குறித்த ஆவணங்கள் ஊடாக அந்த வாகனத்திற்கு ‘E’ வகை இலக்கத் தகட்டைப் பெற்றுக்கொள்வதற்கும், சேஸ் இலக்கத் திருத்தக் கோப்புகளை சட்டவிரோதமாக மறைத்து வைத்து, போலியான வாக்குமூலங்களை வழங்கி, அந்த வாகனத்தை சட்டவிரோதமாக ஒன்றிணைக்க உதவியதாகவும் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த 27ஆம் திகதி மாலை கொழும்பு 07, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் (30) குருணாகல் – பிலஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே, அவரை எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த சந்தேகநபர் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளிடம் விசாரணை

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்றஅரசியல்வாதிகளிடம் விசாரணை இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள…

56 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மீனவர்கள் மூவர் கைது!

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்து…

36 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

46 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

67 0 0