உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

ஹட்டன் நகரில் கடும் நீர் தட்டுப்பாடு: நகர சபை மீது குற்றச்சாட்டு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
35 பார்வைகள்

கடுமையான வெப்பமான காலநிலையால் ஹட்டன் நகரில் கடும் நீர் தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்கே மக்கள் ஐந்து முதல் ஆறு நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னரும் நீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தாலும், இம்முறை நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டில் அதிக மழை பெய்திருந்த போதிலும், பின்னர் ஏற்பட்ட வறட்சியால் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது.அதேவேளை, நகர சபையின் நிர்வாக குறைபாடுகளும் தற்போதைய நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சில தனியார் நிறுவனங்களுக்கு நீர் விநியோகம் செய்யப்பட்டாலும், சிறுவர்கள், கர்ப்பிணிகள், முதியோர் உள்ளிட்ட பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்தெரிவிக்கப்படுகிறது.


நகர சபையின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை எனக் குறிப்பிட்டு, முன்னாள் நகர பிதாவும் தற்போதைய உறுப்பினருமான அழகுமுத்து நந்தகுமார் அண்மையில் சபை அமர்விலிருந்து வெளியேறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.நீர் விநியோகம் மற்றும் கழிவு மேலாண்மை தொடர்பாக நகர சபை அசட்டுத்தனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், சரியான நிர்வாகம் மற்றும் திட்டமிடல் இருந்தால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.


மேலும், ஹட்டன் நகரில் பொதுக் கழிவறைகளில் கூட நீர் வசதி இல்லாத நிலையிலும், பயன்படுத்துவதற்கு 40 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவது அநியாயம் என மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

38 0 0
இலங்கை செய்திகள்

மூத்த நடிகை லீலா ரஞ்சனி அவர்களுக்கு பொற்கிழி வழங்கி கௌரவிப்பு.!

இலங்கையின் நாடக மற்றும் திரைப்படத் துறையில் பல தசாப்தங்களாகத் தடம் பதித்து வரும் மூத்த நடிகை லீலா ரஞ்சனி அவர்களின் நீண்டகால கலைச் சேவையினைப் பாராட்டி, நடிகரும்…

42 0 0
இலங்கை செய்திகள்

முதலீடுகளை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சவால்களை சரி செய்ய வேண்டும்.!

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில் (One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில்…

34 0 0
இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

42 0 0