கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைவிடப்பட்ட பொதிகளில் இருந்து சிகரெட்டுகள் சுங்க அதிகாரிகளால் மீட்பு.!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உரிமை கோரப்படாமல் கைவிடப்பட்டிருந்த 13 பயணப் பொதிகளில் இருந்து சுமார் 28 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய 928 கார்டன் சிகரெட்டுகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்
.
சுங்க அதிகாரிகளின் கடுமையான சோதனைகளை அஞ்சிய கடத்தல்காரர்கள், அவற்றை வெளியே கொண்டு செல்ல முடியாத நிலையில் விமான நிலையத்திலேயே கைவிட்டு சென்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக சுங்கப் பிரிவின் பொறுப்பில் இருந்த இந்தப் பொதிகளுக்கு எவரும் உரிமை கோரவில்லை.
இதனையடுத்து நேற்று அவை திறந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதுசூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான சிகரெட் தொகை கண்டுபிடிக்கப்பட்டது.இச்சம்பவம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளை சுங்கத் திணைக்களம் மேற்கொண்டு வருகிறது.