உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: கம்மன்பில புத்தகம் விசாரணைக்கு உதவும் – அமைச்சர் நளிந்த தெரிவிப்பு.!
உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி குறித்து முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தனது புத்தகத்தின் மூலம் தகவல்கள் வெளியிட்டால், விசாரணைகளை முன்னெடுக்க அது உதவியாக இருக்கும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.’
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில் அவர் கூறியதாவது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தற்போது மேற்கொண்டு வரும் விசாரணைகளில் தேடப்பட்டுவரும் முக்கிய சூத்திரதாரி தொடர்பான தகவல்கள் கம்மன்பில வெளியிட்டால், விசாரணை அதிகாரிகள் அதனை அடிப்படையாகக் கொண்டு வாக்குமூலங்களைப் பெற்று அடுத்தகட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்த முடியும் என்றார்.
மேலும், குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் உண்மைகள் வெளிவர வேண்டும் என்பதற்காகவே விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும், உண்மைகள் வெளியாகும் சூழலில் எதிர்க்கட்சியின் சிலரின் செயற்பாடுகள் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றனஎன்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், கம்மன்பிலவை கைது செய்வது குறித்து அரசாங்கம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும், அவர் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.