உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

சபாநாயகருக்காக ஆஜராகாத சட்டமா அதிபர்! நீதிமன்றத்தில் திடீர் திருப்பம்!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
34 பார்வைகள்

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன அவர்களின் பணி இடைநிறுத்தத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது, பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள சபாநாயகர் சார்பில் சட்டமா அதிபர் முன்னிலையாகாத நிலையில், ஜனாதிபதி சட்டத்தரணி கே. கனகேஸ்வரன் நீதிமன்றில் முன்னிலையானார்.


சட்டவிரோதமான முறையில் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சமிந்த குலரத்னவின் பணி இடைநிறுத்தப்பட்டதை எதிர்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, இந்த வழக்கை சமரசமாக தீர்க்கும் வாய்ப்பு இருப்பதாக சபாநாயகர் தரப்பு நீதிமன்றில் தெரிவித்திருந்தது.

அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹந்தஅபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ முன்னிலையில் மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி, சபாநாயகர் சார்பில் தாம் முன்னிலையாகமாட்டோம் என அறிவித்தார்.


மனுதாரர் தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, மனுவின் விடயங்களை உறுதிப்படுத்த திகதி வழங்குமாறு கோரியதையடுத்து, ஏப்ரல் 20ஆம் திகதிக்கு முன்னர் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் பிரதிவாதி தரப்பிற்கு உத்தரவிட்டது.இந்த வழக்கில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன உள்ளிட்ட நாடாளுமன்ற ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

38 0 0
இலங்கை செய்திகள்

மூத்த நடிகை லீலா ரஞ்சனி அவர்களுக்கு பொற்கிழி வழங்கி கௌரவிப்பு.!

இலங்கையின் நாடக மற்றும் திரைப்படத் துறையில் பல தசாப்தங்களாகத் தடம் பதித்து வரும் மூத்த நடிகை லீலா ரஞ்சனி அவர்களின் நீண்டகால கலைச் சேவையினைப் பாராட்டி, நடிகரும்…

42 0 0
இலங்கை செய்திகள்

முதலீடுகளை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சவால்களை சரி செய்ய வேண்டும்.!

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில் (One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில்…

34 0 0
இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

42 0 0