விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்.!
அம்பாறை மாவட்டம், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் பரீட்சை வழிகாட்டி வினாத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளன.தாயக கல்வி விடியல் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட இந்த உதவித்திட்டத்தின் கீழ், மாலைநேர வகுப்புகளுக்கான தேவையான பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.
பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு, பாடசாலை அதிபர் தம்பிராசா தவராசா தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அமைப்பின் தலைவர் எஸ். கோகுலன், செயலாளர் கே. பிரிந்தன், இணைப்பாளர் தகுசாந், திருக்கோவில் வாண்மை விருத்தி நிலைய விரிவுரையாளர் எஸ். விக்னேஸ்வரன், மதகுரு கிருபாகரசர்மா, பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

