நாளை முதல் எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகள் வழமைக்கு.!
நகரங்களுக்கு இடையேயான எரிபொருள் போக்குவரத்து கட்டணத்தை 25% அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உடன்பாடு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நாளை (28) முதல் எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகள் மீண்டும் வழமைபோல் முன்னெடுக்கப்படும் என இலங்கை பெற்றோலிய தனியார் எரிபொருள் பாரவூர்தி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.