உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

நிந்தவூர் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான பாதீடு நிறைவேற்றம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
32 பார்வைகள்

நிந்தவூர் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான பாதீடு நிறைவேற்றப்பட்டுள்ளது.

தவிசாளர் சட்டத்தரணி ஏ .எல். றியாஸ் ஆதம் தலைமையில் நேற்று வியாழக்கிழமை(26) நிந்தவூர் பிரதேச சபையின் அமர்வு நடைபெற்ற போது 2026ஆம் ஆண்டுக்கான பாதீடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 06 உறுப்பினர்கள் (தவிசாளர் உட்பட) ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

குறித்த பாதீடு நிறைவேற்றத்தின் போது முஸ்லிம் காங்கிரஸ் 03 உறுப்பினர்கள் எதிராகவும், தேசிய மக்கள் சக்தி 02 உறுப்பினர்கள் நடுநிலைமை வகிப்பதாகவும் சபையில் குறிப்பிட்டனர்.

இந்நிலையில் குறித்த சபை அமர்வின் போது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஒரு உறுப்பினரும் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் உதவி தவிசாளரான உறுப்பினரும் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முதலீடுகளை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சவால்களை சரி செய்ய வேண்டும்.!

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில் (One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில்…

29 0 0
இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

39 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்.!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார். நேபாளத்தில் நிலவும்…

62 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

59 0 0