உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

இலங்கையில் மேலும் தீவிரமடையும் வெப்பம் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
35 பார்வைகள்

இலங்கையில் நிலவி வரும் கடும் வெப்பத்துடன் கூடிய காலநிலை எதிர்வரும் வாரங்களில் மேலும் தீவிரமடையக்கூடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க இதனைத் தெரிவித்தார். சூரியன் நேரடியாக உச்சம் கொடுப்பதாலும், உலகளாவிய காலநிலை மாற்றங்களினாலும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெப்பத்தின் தாக்கம் உச்சத்தை எட்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


இதனால் முற்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை தேவையற்ற வெளிச்செல்லலை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெப்பத்தைத் தடுக்க இளநிற ஆடைகள் அணிதல், குடை அல்லது தொப்பி பயன்படுத்தல், அதிகளவு நீர் அருந்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


பாடசாலை மாணவர்கள், குறிப்பாக வெளிப்புற விளையாட்டுகளில் ஈடுபடும்வர்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும், நீண்ட நேரம் வெயிலில் இருப்பதால் மயக்கம், வாந்தி அல்லது உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டால் உடனடி மருத்துவ உதவி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடியதால், அவர்களுக்கான பராமரிப்பில் குடும்பத்தினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, சில மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம்தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

34 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்.!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார். நேபாளத்தில் நிலவும்…

59 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

57 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

60 0 0