மீன்பிடி துறையினர் எரிபொருள் சிக்கல்களைத் தீர்க்க 24 மணிநேர அவசர சேவை.!
மீன்பிடி மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையில் ஈடுபட்டவர்களின் எரிபொருள் சிக்கல்களை தீர்க்க புதிய 24 மணிநேர அவசர உதவித் தொலைபேசி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மீன்பிடி மற்றும் கடல்சார் தொழில்துறையை மேம்படுத்தும் நோக்கில், எரிபொருள் விநியோகத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக இந்த விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொழில்துறை சார்ந்த எரிபொருள் விநியோகத் தடைகள் அல்லது மேலதிக தேவைகள் தொடர்பான புகார்களை 0114323389 என்ற இலக்கத்தில் 24 மணிநேரமும் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.