மறைத்து வைக்கப்பட்டிருந்த பாரிய எரிபொருள் மீட்பு; ஒருவர் கைது.!
வவுனியா எ9 வீதியில் தாண்டிக்குளம் பகுதிக்கு அண்மையில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி எரிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற விசேட தகவலையடுத்து பொலிஸாரின் உதவியுடன்
அந்தப்பகுதியில் உள்ள பிரபல வாகன திருத்தகம் ஒன்று நேற்று இரவு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது அங்கு களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 900 லீற்றர் சுப்பர் டீசல், டீசல் 600 லீற்றர், பெற்றோல் 400 லீற்றர் என்பன கைப்பற்றப்பட்டதுடன் பதுக்கிய குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட எரிபொருட்கள் ஏனைய சட்ட நடவடிக்கைகளுக்காக வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

