உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

கல்வி சீர்திருத்தங்களுக்கான தேசிய வழிகாட்டல் குழுவை நியமிக்க அனுமதி.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
18 பார்வைகள்

இலங்கையின் கல்வி முறையை தற்போதைய அரச கொள்கைகளுக்கு அமைய நவீனமயமாக்கும் நோக்கில், ‘கல்விச் சீர்திருத்தங்களுக்கான தேசிய செயற்பாட்டு குழுவை’ நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட புதிய கல்விச் சீர்திருத்தங்கள், தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமைய மாற்றியமைக்கப்பட்டு, 2026 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், 6ஆம் தரத்திற்கான சீர்திருத்தங்களை 2027 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தச் சீர்திருத்தச் செயல்பாடுகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கவும், ஒழுங்குபடுத்தவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த குழு அமையவுள்ளது.

குழுவில் அமைச்சர்கள், துறை சார்ந்த நிபுணர்கள், அதிகாரிகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் உள்வாங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்…

27 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

30 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த ஒன்றரை மாதங்களில் சிறைச்சாலை நெரிசல் குறையும்.!

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் முற்றாகக் குறைக்கப்படும்…

61 0 0
இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

52 0 0