உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

ஆசிய அபிவிருத்தி வங்கியால் இலங்கைக்கு பாரிய நிதியுதவி.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
27 பார்வைகள்

ஆசிய அபிவிருத்தி வங்கி, இந்த ஆண்டிற்காக இலங்கைக்கு ஒதுக்கிய 380 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை 480 மில்லியன் டொலர் வரை அதிகரிக்க ஒத்துழைப்பு தெரிவித்தது. இதிலிருந்து 200 மில்லியன் டொலர் உடனடியாக இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது.


இலங்கையில் வந்த ஆசிய அபிவிருத்தி வங்கி தலைவர் மசாட்டோ கண்டா தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து நாட்டின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்களுக்கு வங்கி எவ்வாறு உதவ முடியும் என்பதை விரிவாகக் கலந்துரையாடினர்.


‘டித்வா’ அனர்த்தத்துக்குப் பிறகுநாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வேலை திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஆதரவளிக்க தயாராக உள்ளது என வங்கி தலைவர் தெரிவித்தார். இவர், மத்திய மலைநாட்டின் நீர் கட்டமைப்புகளைப் பாதுகாத்து, மீண்டும் இத்தகைய பாதிப்பு ஏற்படாதிருக்கும் வகையில் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் தயாராக இருப்பதும் கூறினார்.


ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய உதவிகளைப் பாராட்டி, இலங்கையின் பொருளாதார நிலைத்தன்மையை பேணுவதே அரசாங்கத்தின் பிரதான எதிர்பார்ப்பு என வலியுறுத்தினார்.


இச்சந்திப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் சோனா சிரேஸ்தா மற்றும் இலங்கை அரசாங்கத்தின் தொழில், பொருளாதார அபிவிருத்தி, நிதி அமைச்சு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்…

27 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

30 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த ஒன்றரை மாதங்களில் சிறைச்சாலை நெரிசல் குறையும்.!

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் முற்றாகக் குறைக்கப்படும்…

61 0 0
இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

52 0 0