உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

இந்திய – இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் தொலைபேசி உரையாடல்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
23 பார்வைகள்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையில் நேற்று விசேட தொலைபேசி உரையாடல் நடைபெற்றது.


மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர் சூழ்நிலை மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பிராந்திய தாக்கங்கள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.


இந்த உரையாடல் தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தனது சமூக வலைதளப் பதிவில், இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் பயனுள்ள உரையாடல் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை மற்றும் அதன் விளைவுகள் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டையும் அவர் விளக்கமளித்துள்ளார்.


அத்துடன், அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் இந்தியாவின் கொள்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும்வளர்ச்சியை உறுதிப்படுத்தும் செயற்திட்டங்கள் மீதான அர்ப்பணிப்பையும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த இருதரப்பு உரையாடல் பிராந்திய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் பயனுள்ளதாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்…

27 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

30 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த ஒன்றரை மாதங்களில் சிறைச்சாலை நெரிசல் குறையும்.!

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் முற்றாகக் குறைக்கப்படும்…

61 0 0
இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

52 0 0