உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

உலக வாய் சுகாதார தினத்தையொட்டி மன்னாரில் விழிப்புணர்வு நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
33 பார்வைகள்

உலக வாய் சுகாதார தினத்தையொட்டி வாயின் மகிழ்ச்சி, வாழ்வின் மகிழ்ச்சி எனும் கருப்பொருளில் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வாய் சுகாதார பிரிவு ஏற்பாடு செய்த உலக வாய் சுகாதார தின விழிப்புணர்வு நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (24) காலை மன்னார் பிராந்திய பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது.

பிராந்திய பல் வைத்திய நிபுணர் வைத்தியர் ஏ.றொபேட் சில்வா தலைமையில் இடம்பெற்ற குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆசாத் எம். ஹனிபா கலந்து கொண்டார்.

மேலும் விருந்தினர்களாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட், மாவட்டத்தில் கடமையாற்றும் பல் வைத்திய நிபுணர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது வருகை தந்த மக்களுக்கு வாய் சுகாதாரம் தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளதோடு, வாய் சுகாதாரம் இன்மையால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்தும், குறிப்பாக வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணம் அறிகுறிகள் குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வாய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, வாய் புற்றுநோயில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்வது குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்…

34 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

31 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த ஒன்றரை மாதங்களில் சிறைச்சாலை நெரிசல் குறையும்.!

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் முற்றாகக் குறைக்கப்படும்…

61 0 0
இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

52 0 0