உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

புதுக்குளம் மகா வித்தியாலயத்தின் தேவைப்பாடுகளை நிறைவேற்றி தருமாறு சத்தியலிங்கம் எம்.பி கோரிக்கை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
25 பார்வைகள்

வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட புதுக்குளம் மகாவித்தியாலயத்திற்கு பிரதி கல்வி அமைச்சர் மருத்துவர். மதுர செனவிரத்ன அவர்கள் நேற்று (11.03.2026) வருகை தந்திருந்தார்.

பாடசாலையின் பழைய மாணவர்கள் என்ற அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் பா.பாலேந்திரன் அவர்களும் குறித்த வருகை நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

பாடசாலையின் தேவைப்பாடுகள் தொடர்பில் பெற்றோர் மற்றும் பாடசாலை சமூகத்தினருடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. முக்கிய தேவைப்பாடுகள் குறித்து பாடசாலை அதிபர் கோரிக்கை முன்வைத்திருந்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,
இப் பாடசாலையானது வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் முக்கியமான பாடசாலை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கான பாடசாலையாகும். அதுமட்டுமல்லாது, வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் ஒரு வளநிலையமாகவும் இப்பாடசாலை பயன்படுகின்றது. வலய மட்ட, மாகாண மட்ட போட்டிகள் இங்கு நடைபெறுகின்றது.

எனவே, இப் பாடசாலையின் பெளதீக மற்றும் ஆளணி வளங்களை நிவர்த்தி செய்துதருமாறு தங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். குறிப்பாக பாடசாலையின் மைதான அபிவிருத்தி தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறும் எமது பாடசாலையின் பழைய மாணவர்கள் சார்பாக கோரிக்கை விடுக்கின்றேன் என தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

82 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0