க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு.!
செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் இன்றைய தினம் காலை செம்பியன் பற்று வடக்கு பகுதியில் இருந்து க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு மற்றும் சிறிய தொகை பணமும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வானது இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கிழமை வாரத் திருப்பலியினை தொடர்ந்து செம்பியன் பற்று பங்கு தந்தை ஜஸ்டின் ஆதர் தலைமையில் சிறிய உரையினை தொடர்ந்து இடம்பெற்றது.
இந் நிகழ்வில் செம்பியன் பற்று வடக்கு பங்கு மக்கள், இளைஞர்கள், அருட்சகோதரி என பலரும் கலந்து கொண்டனர்.



