ஆசிய அபிவிருத்தி வங்கித் தலைவருடன் ஹரிணி பேச்சு.!
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாடோ கான்டாவுடன் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பேச்சு நடத்தியுள்ளார்.
உலகப் பொருளாதார மன்ற மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சுவிட்சர்லாந்து சென்றுள்ள பிரதமர், அங்கு முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தி வருகின்றார்.
இந்நிலையில் உலகப் பொருளாதார மன்ற மாநாட்டுக்குச் சமாந்தரமாக மேற்படி சந்திப்பை அவர் நடத்தியுள்ளார்.
இதன்போது இலங்கையின் பொருளாதார மீட்சி, பேரிடரின் பின்னரான மீள் கட்டமைப்பு பணி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.



