உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

ஹட்டனில் நகைக் கடையில் வாடிக்கையாளர் போல் வந்து தங்கச் சங்கிலி திருட்டு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
25 பார்வைகள்

ஹட்டன் நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள தங்க நகைக் கடையொன்றில், வாடிக்கையாளர் போல நடித்து வந்த நபர் ஒருவர், ரூ.2 இலட்சத்து 85 ஆயிரம் பெறுமதியான தங்கச் சங்கிலியை திருடிச் சென்ற சம்பவம் இன்று (21) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தங்கச் சங்கிலி வாங்குவதற்காக வந்தவர் போல் கடைக்குள் நுழைந்த குறித்த நபர், அங்கிருந்த பெண் ஊழியர்கள் காண்பித்த பல நகைகளை கவனமாகப் பார்வையிட்டுள்ளார்.

பின்னர் ஒரு தங்கச் சங்கிலியை ஆய்வு செய்வது போல் எடுத்துக் கொண்ட அவர், திடீரென அதனை எடுத்துக்கொண்டு கடையிலிருந்து தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவ நேரத்தில் கடையில் இரண்டு பெண் ஊழியர்கள் மட்டுமே பணியில் இருந்துள்ளனர். கடையின் உரிமையாளர் தனிப்பட்ட தேவைக்காக வெளியே சென்றிருந்த சூழ்நிலையை பயன்படுத்தியே இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.


கொள்ளையடிக்கப்பட்ட தங்கச் சங்கிலியின் பெறுமதி சுமார் ரூ.2 இலட்சத்து 85 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை சந்தேக நபரின் அடையாளம் கண்டறியப்படவில்லை.
எனவே, குறித்த நபர் தொடர்பான தகவல்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான விபரங்கள் தெரிந்தவர்கள், அதனை உடனடியாக தொடர்புடைய அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும்.!

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போதைய…

55 0 0
இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

61 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

55 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

27 0 0