உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

எதிர்க்கட்சி எம்பிக்கள் தரம் ஐந்தில் தேர்ச்சி பெறவில்லை.. சபையில் சஜித் காட்டம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
16 பார்வைகள்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, எதிர்க்கட்சி உறுப்பினர்களை அவமதித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார்.ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தரம் 5இல் தேர்ச்சி பெறவில்லை என்று ஜகத் விக்ரமரத்ன கூறியதைத் தொடர்ந்து, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சஜித் பிரேமதாச, இதுபோன்ற கருத்துக்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போது சக சட்டமன்ற உறுப்பினர்களைப் பற்றி இழிவான அறிக்கைகளை வெளியிடுவதைத் தடைசெய்யும் நிலையியற் கட்டளைகளை மீறுவதாகக் கூறினார்.சபாநாயகரின் கருத்துக்கள் எதிர்க்கட்சியை அவமதிக்கும் செயலாகும் என்றும், நாடாளுமன்றத்தின் ஒழுக்கத்தை சீர்குலைக்கும் செயல் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வி நிலைமை குறித்து அரசாங்கம் கேலி செய்யும் அதே நேரத்தில் 6ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் ஆபாசத்தை அறிமுகப்படுத்த முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும்.!

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போதைய…

51 0 0
இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

59 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

25 0 0