உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

இரண்டு மாதங்களாக நடுக்காட்டில் சிக்கியுள்ள ரயில்: டிட்வா பாதிப்பால் சோகம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
26 பார்வைகள்

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் தண்டவாளப் பாதிப்புகள் காரணமாக, ரயில் ஒன்று சுமார் இரண்டு மாதங்களாக உலப்பனை மற்றும் கம்பளை ரயில் நிலையங்களுக்கு இடையே நின்றுகொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 27ஆம் திகதி மதியம் 2:07 மணிக்கு கண்டியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் புறப்பட்ட 1153 ஆம் இலக்க ரயில் இந்தப் பாதிப்புக்கு உள்ளானது.கம்பளை மற்றும் உலப்பனைக்கு இடைப்பட்ட வாரக்காபிட்டிய உப ரயில் நிலையத்திற்கு அருகில் இரண்டு இடங்களில் தண்டவாளங்கள் சரிந்து விழுந்துள்ளன.

மண்சரிவைக் கண்ட ரயில் சாரதி, ரயிலை பின்னோக்கி நகர்த்த முயன்றபோது, கம்பளைப் பகுதியிலும் தண்டவாளம் வளைந்திருப்பதைக் கவனித்தார். இதனால் விபத்தைத் தவிர்க்கும் நோக்கில், ரயிலை பாதுகாப்பான ஓரிடத்தில் நிறுத்திவிட்டு நாவலப்பிட்டி கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் வழங்கினார்.

பெரும் அனர்த்தம் ஏற்படவிருந்த நிலையில், சாரதியின் சமயோசித முயற்சி மற்றும் அப்பகுதி குறித்த அவரது அனுபவ அறிவு காரணமாகப் பயணிகள் எவ்வித பாதிப்புமின்றி உயிர் தப்பினர் என வாரக்காபிட்டிய மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளதால், அன்றாடத் தேவைகளுக்காகவும் கல்விக்காகவும் ரயிலை நம்பியிருந்த கிராம மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

சம்பவம் நடந்து மூன்று நாட்களின் பின்னரே சாரதி உள்ளிட்ட ஊழியர்கள் நாவலப்பிட்டி ரயில் நிலையத்திற்குத் திரும்பியிருந்தனர்.எனினும், சேதமடைந்த தண்டவாளங்கள் இன்னும் சீரமைக்கப்படாததால், அந்த ரயில் சுமார் இரண்டு மாதங்களாக அதே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட தண்டவாளத்தை உடனடியாகச் சீரமைத்து, போக்குவரத்துச் சேவைகளை மீள ஆரம்பிக்குமாறு அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை.!

அரச புலனாய்வுதுறையின் தகவலிற்கமைய வடமராட்சி, துன்னாலை காட்டு பிரதேசத்தில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத மதுபானமான கசிப்பு உற்பத்தி நிலையம் நெல்லியடி பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது. இந்த…

54 0 0
இலங்கை செய்திகள்

காணாமல்போன வைத்தியர் ச*டலமாக மீட்பு.!

காணாமல்போன பதுளை வைத்தியசாலையின் மயக்கவியல் வைத்திய நிபுணரின் சடலம், மஹியங்கனை – மாபாக்கடவெவ பகுதிக்கு அருகில் உள்ள பாறை ஒன்றின் மீது கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…

63 0 0
இலங்கை செய்திகள்

தொழிற்சங்க போராட்டத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்.!

பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனியவின் இடமாற்றம் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று…

33 0 0
இலங்கை செய்திகள்

விசேட வைத்தியர் ஒருவர் மாயம்.!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன்…

80 0 0