முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட அனர்த்த முன்னெச்சரிக்கை.!
அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அனர்த்த முன்னெச்சரிக்கை நேற்று (09.01.2026) மாலை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது உள்ள ஆழ்ந்த காற்றழுத்தம் நாளை மதியம் மற்றும் மாலை திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் கடந்து செல்ல வாய்ப்புள்ளது.அதனால், முல்லைத்தீவில் நேற்று இரவு மற்றும் இன்று கனமழை மற்றும் க டுமையான காற்று நிலை ஏற்படலாம்.
முல்லைத்தீவு விவசாயிகள் நித்தகைக்குளம் மற்றும் தண்ணி முறிப்பு பிரதேச வயல்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கடற்றொழிலாளர்கள் கடல் அலை உயர்வாக இருக்கும். அதனால் கரையோரப் பகுதியில் உள்ள மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களில் வைத்துக் கொள்ளுமாறும் தகவல் விடுத்துள்ளது.