உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கொழும்பில் கலாமித்ரா விருது விழா!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
20 பார்வைகள்

கலை, இலக்கிய மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு வளர்ந்து வரும்  இளம் படைப்பாளிகளுக்குக் களம் அமைப்பதைப் பிரதான செயற்பாடாக் கொண்டு  தலைநகரில் கடந்த  45ஆண்டுகளாக  பணியாற்றி வரும் புதிய அலை கலை வட்டம் வரும் ஐனவரி 30ஆம் திகதி 46ஆவது  ஆண்டுக்குள் காலடி பதிக்கின்றது.

பணிகளின் வரிசையில் 1995ஆம் ஆண்டு  முதல்  இளையோருக்கான கலை,கலாசாரப் போட்டிகளை நடத்தி  விருதளித்து   ஊக்குவித்து வரும் இந்த  அமைப்பு  இதன் 20ஆவது  ஆண்டின் தொடராக கலாமித்ரா விருது விழாவை  வரும் 30 ஆம் திகதி கொழும்பு – 11 செட்டியார் தெருவில்  அமைந்துள்ள  கல்யாண முருகன் மண்டபத்தில் மாலை 6 மணிக்கு  நடத்துகின்றது.

இந்த விழாவுக்கு அமைப்பின்  நிறுவனர்  ராதாமேத்தா தலைமை ஏற்கின்றார்.இதில் பிரதம அதிதியாக  ஹாசிம் உமர் பவுண்டேஷன் அமைப்பின்  நிறுவனர் ஹாசிம் உமர் கலந்துகொள்கின்றார்.

இந்த நிகழ்வினில் கலை, கலாசாரப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி  பெற்ற 25 பேருக்கு வெற்றியாளர் விருதும், கலை, இலக்கிய  படைப்பாக்கங்களில் தொடர்ந்து  பங்களிப்புச் செய்து வரும் பத்து துறைகளைச் சார்ந்த  பத்து பேருக்கு கலாமித்ரா விருதும், சமூக மற்றும் கலை ஊடகப் பணிகளில் சிறப்பாகச் செயற்பட்டு வரும் 15 பேருக்கு  சிறப்பு விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

இந்த நிகழ்வு புதிய அலை கலை வட்டத்தின் பிரதம நிர்வாகத்தின்  தலைவர் ஷண்மு, செயலாளர்  சி.அழகேஸ்வரன்  மற்றும்  பொருளாளர் ரவிராம் ஆகியோரின் ஏற்பாட்டில் ஒருங்கமைக்கப்படுகின்றது என்பது  குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

76 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0