ஜோன்ஸ்டன் மற்றும் அவரது இரு மகன்கள் உட்பட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல்.!
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட ஐவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் வத்தளை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான லொறி ஒன்றை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வழக்கறிஞர்கள் அவரைப் பிணையில் விடுவிக்குமாறு கோரிய போதிலும் நீதிவான் அந்தக் கோரிக்கையை நிராகரித்து சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
சந்தேகநபர்களின் தரப்பில் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் நீதிவான் நிராகரித்தார்.
கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக இருந்த காலத்தில், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனக்குச் சொந்தமானது என்று கூறப்படும் எத்தனால் நிறுவனத்தின் செயற்பாடுகளுக்குச் சதொச லொறியைப் பயன்படுத்தியுள்ளார்.
இதனால் அரசுக்கு 2.5 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டது என்று கூறப்படுகின்றது.