அவுஸ்ரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியத்தால் காரைதீவில் கற்றல் உபகரணங்களுக்கான வவுச்சர்கள் வழங்கி வைப்பு..!
அவுஸ்ரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியத்தால் ( AUSKAR ) அம்பாறை மாவட்ட மட்டுப்படுத்தப்பட்ட காரைதீவு மீனவர் சங்க உறுப்பினர்களின் பாடசாலைக்கு செல்லும் 18 பிள்ளைகளிற்கான கற்றல் உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்கானரூபாய் 4000.00/- பெறுமதியான வவுச்சர்கள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வானது காரைதீவு மட்டுப்படுத்தப்பட்ட மீனவர் சங்கதின் ஏற்பாட்டில் சங்கத்தின் செயலாளர் ர.சுஜீதன் தலைமையில் காரைதீவு வீரபத்திரர் அறநெறி பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
மேலும் இவ் நிகழ்வில்அவுஸ்ரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியத்தின் ( AUSKAR ). உறுப்பினர்கள் மற்றும் மீனவர் சங்கத்தினர் மற்றும் மாணவர்கள் பொதுமக்கள் நலன் விரும்பிகள் என பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்…