உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பிரதிப் பாதுகாப்பு அமைச்சருடன் இந்திய இராணுவத் தளபதி பேச்சு.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
28 பார்வைகள்

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்ர திவ்வெதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய இராணுவத் தளபதி நேற்று இலங்கை வந்தார். ஜெனரல் திவ்வெதியை பிரதி அமைச்சர், அன்புடன் வரவேற்றதுடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்று, கலாச்சார மற்றும் நாகரிக உறவுகளை இரு தரப்பினரும் நினைவுபடுத்தினர்.

அண்மையில் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தத்தின்போது இந்திய அரசு அளித்த கணிசமான மற்றும் பன்முக ஆதரவுக்காக இலங்கை ஜனாதிபதி மற்றும் மக்களின் சார்பாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

அனர்த்த நிவாரணக் குழுக்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட இந்தியாவின் உரிய நேரத்தினாலான ஆதரவு நாட்டின் மீட்பு மற்றும் நிவாரணம் முயற்சிகளில் முக்கிய பங்கு வகித்தது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்தக் குழுக்கள் தொடர்ந்தும் நிவாரணம் மற்றும் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து வருகின்றன. கடல் பிராந்தியத்தில் போதைப்பொருள் மற்றும் பிற நாடுகடந்த குற்றங்களை வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்த வழிவகுத்த இந்திய பாதுகாப்புப் படைகளுடனான செயற்பாட்டு ஒத்துழைப்புக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

மேம்பட்ட தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் அறிவுசார் பகிர்வு முயற்சிகள் மற்றும் எதிர்கால பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தை எதிர்கொள்வதில் இலங்கை அரசாங்கமும் மக்களும் காட்டிய வலுவான தேசிய ஒற்றுமை மற்றும் மீள் தன்மையைப் ஜெனரல் திவ்வெதி பாராட்டினார்.

இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை துறைகளில் இலங்கையுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான இந்தியாவின் வலுவான உறுதிப்பாட்டை ஜெனரல் திவ்வெதி மீண்டும் உறுதிப்படுத்தினார்.

மனிதாபிமான உதவி, அனர்த்த மீட்பு, பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு முயற்சிகளில் தொடர்ந்து ஆதரவை வழங்குவதற்கும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், பிராந்திய ஸ்திரத்தன்மை, மீள்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் இந்தியாவின் தயார்நிலையை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையே நீடித்த நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மையை உருவாக்க இளைய, நடுத்தர மற்றும் சிரேஷ்ட தலைமைத்துவங்கள் மூலம் அனைத்து மட்டங்களிலும் மக்களுக்கிடையிலான பிணைப்புகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், அவசர சூழ்நிலைகளின் போது பொதுவான புரிதலை வளர்ப்பதற்காக, தேசிய அளவில் இருந்து தந்திரோபாய நிலை வரை அனர்த்த முகாமைத்துவ பொறிமுறையை மேம்படுத்த கூட்டு பயிற்சி மற்றும் பரிமாற்ற திட்டங்களின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

இந்தச் சந்திப்பு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீடித்த நட்பு மற்றும் கூட்டாண்மையை உறுதிப்படுத்துவதாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்திய இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், கொழும்பிலுள்ள பாதுகாப்பு ஆலோசகர் உட்பட இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0