உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

அரசியல், செல்வந்தர்களுக்கு மட்டுமானது என்ற நிலையை அரசாங்கம் உருவாக்குகின்றது – அலி சப்ரி.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
25 பார்வைகள்

செல்வந்தர்கள் மட்டுமே அரசியலில் ஈடுபட முடியும் என்ற நிலையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் அலி சப்ரி குற்றம் சுமத்தியுள்ளார்.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய உரிமைகளை ரத்து செய்யும் அரசின் தீர்மானத்தை அவர் இவ்வாறு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இந்த தீாமானம் இது பொருளாதார அவசியத்தால் எடுக்கப்பட்ட முடிவல்ல எனவும் மக்களின் கோபத்தை திருப்திப்படுத்தும் அரசியல் ரீதியான முடிவு மட்டுமே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.நாடர்ளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியங்களுக்கு செலவாகும் தொகை மிகச் சிறியது எனவும், அது நாட்டின் பொருளாதாரத்தை சீர்செய்யவோ, பாதீட்டு பற்றாக்குறையை குறைக்கவோ, பொது சேவைகளை மேம்படுத்தவோ எந்த வகையிலும் உதவாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த முடிவுக்கு உண்மையான பொருளாதார நோக்கம் எதுவும் இல்லை. இது தற்காலிக அரசியல் லாபத்திற்காகவும், மக்கள் கோபத்தை பயன்படுத்துவதற்காகவும் எடுக்கப்பட்ட தீர்மானம் எனவும் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் என்பது மரியாதையுடன் வாழ்க்கையை நடத்தும் ஒரே ஆதாரமாக இருந்ததாகவும், அதை ரத்து செய்வது ஊழலை தண்டிப்பதல்ல, பதவியில் இருக்கும்போது செல்வம் சேர்க்காதவர்களை தண்டிப்பதாகும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.அதிகாரம் தவறாக பயன்படுத்தியவர்களுக்கு ஓய்வூதியம் தேவையில்லை. நல்ல வருமானம் உள்ளவர்களுக்கும் தேவையில்லை.

கட்சி பாதுகாப்பில் இருப்பவர்களுக்கும் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.ஆனால் நேர்மையாக சேவை செய்து, குறைந்த வசதியுடன் பதவியிலிருந்து வெளியேறியவர்களுக்கு அது தேவை என குறிப்பிட்டுள்ளார்.

மிகுந்த செல்வம் உள்ளவர்கள், பாரம்பரிய செல்வம் கொண்டவர்கள் அல்லது கட்சி அமைப்புகளால் நிரந்தரமாக ஆதரிக்கப்படுபவர்கள் மட்டுமே அரசியலில் ஈடுபடும் நிலை உருவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதனால், பொருளாதார வசதி இல்லாத திறமையான, சாதாரண பொதுமக்கள் அரசியலில் நுழைவதை தவிர்ப்பார்கள், இது சீர்திருத்தத்தை வலுப்படுத்தாமல் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் என அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்த நடவடிக்கை அரசியல் பரப்பினை சுருக்கி, ஒரே கட்சி ஆதிக்க கலாச்சாரத்தை மெதுவாக ஊக்குவிக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.முழுமையான ரத்துக்கு பதிலாக, ஓய்வூதியத்தை விருப்பத் தேர்வாகவும், விண்ணப்பம் மற்றும் பரிசீலனைக்கு உட்படுத்தியும் வழங்கியிருக்கலாம் என்பது ஒரு நியாயமான அணுகுமுறை என அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0