உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் கடமைகளை பொறுப்பேற்பு.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
24 பார்வைகள்

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபராக நுவரெலியா கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளரும், இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் II ஐ சேர்ந்த எஸ் ஜெகதீஸ்வரன் அண்மையில் உத்தியோகப்பூர்வமாக கடமைப்பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.

இவர் ஆரம்பக் கல்வியை நு/மெரேய த.ம.வி மற்றும் ராகலை கனிஷ்ட வித்யாலயத்திலும் கற்ற பின்னர் 1997ஆசிரியர் நியமனம் பெற்று ஹ/பிலும்பீல்ட் த. ம. வி கணித பாட ஆசிரியராகவும் பின் மஸ்கலியா சென்.ஜோசப் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றியதோடு ஹ /நோர்வுட் த. ம. வி ஆசிரியராக கடமையாற்றும் போது 2016 அதிபர் சேவை தரம் 3 க்கு நியமனம் பெற்று உதவி அதிபராகவும் கடமையாற்றினார்.

2018ஆம் ஆண்டு இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு உள்வாங்கபட்டு ஹங்குறாக்கத்த வலய கல்வி காரியலயத்தில் கணித பாட உதவி கல்வி பணிப்பாளராக 2 வருடம் கடமையாற்றி இடமாற்றம் பெற்று நுவரெலியா வலயக் கல்வி காரியலயத்தில் 2021 கடமையாற்றியதோடு கோட்டம் 2 இன் கோட்டக் கல்வி பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார்.

மேலும், இவர் கலைமானி பட்டத்தை பேராதனை பல்கலைக்கழகத்திலும் பட்ட பின் கல்வி டிப்ளோமோ பட்டத்தை தேசிய கல்வி நிறுவனத்திலும், கல்வியில் முதுமானி பட்டத்தை யாழ்ப்பாண பல்கலைகழகத்திலும் நிறைவு செய்துள்ளதோடு தற்போது கல்வி நிர்வாக சேவை தரம் 2 அதிகாரியாக கடமையாற்றிக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0