கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் கடமைகளை பொறுப்பேற்பு.!
கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபராக நுவரெலியா கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளரும், இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் II ஐ சேர்ந்த எஸ் ஜெகதீஸ்வரன் அண்மையில் உத்தியோகப்பூர்வமாக கடமைப்பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.
இவர் ஆரம்பக் கல்வியை நு/மெரேய த.ம.வி மற்றும் ராகலை கனிஷ்ட வித்யாலயத்திலும் கற்ற பின்னர் 1997ஆசிரியர் நியமனம் பெற்று ஹ/பிலும்பீல்ட் த. ம. வி கணித பாட ஆசிரியராகவும் பின் மஸ்கலியா சென்.ஜோசப் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றியதோடு ஹ /நோர்வுட் த. ம. வி ஆசிரியராக கடமையாற்றும் போது 2016 அதிபர் சேவை தரம் 3 க்கு நியமனம் பெற்று உதவி அதிபராகவும் கடமையாற்றினார்.
2018ஆம் ஆண்டு இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு உள்வாங்கபட்டு ஹங்குறாக்கத்த வலய கல்வி காரியலயத்தில் கணித பாட உதவி கல்வி பணிப்பாளராக 2 வருடம் கடமையாற்றி இடமாற்றம் பெற்று நுவரெலியா வலயக் கல்வி காரியலயத்தில் 2021 கடமையாற்றியதோடு கோட்டம் 2 இன் கோட்டக் கல்வி பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார்.
மேலும், இவர் கலைமானி பட்டத்தை பேராதனை பல்கலைக்கழகத்திலும் பட்ட பின் கல்வி டிப்ளோமோ பட்டத்தை தேசிய கல்வி நிறுவனத்திலும், கல்வியில் முதுமானி பட்டத்தை யாழ்ப்பாண பல்கலைகழகத்திலும் நிறைவு செய்துள்ளதோடு தற்போது கல்வி நிர்வாக சேவை தரம் 2 அதிகாரியாக கடமையாற்றிக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
