உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

வடக்கு, கிழக்கில் பொலிஸ் அராஜகம்; சிறீதரன் – சந்திரசேகர் கடும் சொற்போர்.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
22 பார்வைகள்

நாடாளுமன்றத்தில் நேற்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் சொற்போர் மூண்டது.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது வடக்கு, கிழக்கில் பொலிஸ் அராஜகம் இடம்பெறுகின்றது என்று சிறீதரன் எம்.பி. குற்றஞ்சாட்டினார். தையிட்டி போராட்டக் களத்தில் வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டமையை அதற்கு உதாரணம் காட்டினார்.

அத்துடன், தமிழர் விவகாரம் தொடர்பில் என்.பி.பி. அரசின் அணுகுமுறையையும் அவர் விமர்சித்தார்.

இதற்குத் தனது உரையின்போது அமைச்சர் இ.சந்திரசேகர் பதில் வழங்கினார்.

“வடக்கில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

பல்பொருள் அங்காடி மற்றும் மதுபானசாலை வைத்துள்ள அரசியல்வாதிகள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெறுகின்றன. இதனால் அவர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் மத்தியில் தமக்கான இருப்பு கேள்விக்குறியாகிவிடும் என்பதால் பொலிஸ் அராஜகம் என்ற விடயத்தைக் கூறி தமிழ் மக்களைக் குழப்பப் பார்க்கின்றனர்.

சிறீதரனே, சுமந்திரனிடம் நீங்கள் அவதானமாக இருங்கள். தமிழரசுக் கட்சி என்பது சீரழிந்துபோன கட்சியாக மாறியுள்ளது. அந்தக் கட்சி போதைவஸ்து கட்சியாகவும் மாறிவிடக்கூடாது.

அதேவேளை, வடக்கு, கிழக்கில் பொலிஸ் அராஜகம் இடம்பெறவில்லை. அவசரகாலச் சட்டத்தை நாம் தவறாகவும் பயன்படுத்தவில்லை.

தையிட்டி விகாரைப் பிரச்சினையைக்கூட நேர்மையான முறையில் தீர்ப்பதற்கே முயற்சிக்கின்றோம். தமிழ் மக்கள் எம்முடன்தான் உள்ளனர்.” – என்று அமைச்சர் சந்திரசேகர் குறிப்பிட்டார்.

இதனால் கடுப்பான சிறீதரன் எம்.பி., முதலில் அமைச்சர் திருந்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

என்.பி.பி. அரசின் பொலிஸ் அராஜகம் நிறுத்தப்பட வேண்டும் என்றும் இடித்துரைத்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0