நிலஅளவையாளர் நாயகம் நியமனம்.!
தற்போது நிலஅளவையாளர் நாயகமாக கடமையாற்றிய என்.கே.யூ. றோஹண 2026.01.31 ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளார்.
அதற்கமைய, வெற்றிடமாகும் நிலஅளவையாளர் நாயகம் பதவிக்கு தற்போது மேலதிக நிலஅளவை நாயகமாக (மத்திய) கடமையாற்றும் இலங்கை நிலஅளவை சேவையின் விசேடதர அதிகாரியான பீ.கே.எல்.எஸ். பண்டுவாவல 2026.02.02 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் நிலஅளவையாளர் நாயகமாக நியமிப்பதற்கு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.