உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மின்சாரக் கட்டணத்தை நிச்சயம் குறைப்போம்! – எரிசக்தி அமைச்சர் உறுதி!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
21 பார்வைகள்

மின்சாரக் கட்டணம் குறைப்பு தொடர்பில் அரசாங்கம் அளித்த வாக்குதியை நிச்சயம் நிறைவேற்றும் என எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி உறுதியளித்துள்ளார்.அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையின்படி, 3 ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணம் 30% குறைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.

“அவசரப்படாதீர்கள், இன்னும் சிறிது காலம் பொறுமையாக இருங்கள். எங்கள் கொள்கை அறிக்கையில் 3 ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30 வீதம் குறைப்பதாகக் கூறப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, பேரிடர்களால் மக்கள் ஏற்கனவே சிரமப்பட்டு வரும் நேரத்தில், எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவதற்கான திட்டங்கள் இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது, எரிபொருள் அடிப்படையிலான மின் உற்பத்தியிலிருந்து சூரிய சக்தி, காற்றாலை மற்றும் நீர் மின்சாரம் போன்ற மலிவான புதுப்பிக்கத்தக்க மூலங்களுக்கு மாறி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணங்களை 30% குறைப்பதாக உறுதியளித்த போதிலும், அந்த உறுதிமொழிகளைக் கைவிட்டு மக்களின் அபிலாஷைகளுக்கு எதிராகச் செயல்படுவதாகவும் அவர் கூறினார்.

மின்சார கட்டணங்களை அதிகரிக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவை கேள்விக்குட்படுத்தி, நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் இன்று நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாச இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0