உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

யாழ். வெண்கரம் அமைப்பின் ஏற்பாட்டில் மலையக மாணவர்களுக்கு கருத்தரங்கு.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
27 பார்வைகள்

யாழ். வெண்கரம் அமைப்பின் ஏற்பாட்டில் நுவரெலியா புசல்லாவை இந்து தேசிய கல்லூரி மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கு, குறித்த பாடசாலையில் இன்றையதினம் நடைபெற்று வருகிறது.

டித்வா புயல் காரணமாக மலையகத்தில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டன. அந்தவகையில் மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இன்னும் ஒரு சில மாதத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ளது. அந்தவகையில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் குறித்த மாணவர்கள் வீட்டில் இருந்து சுய கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அவர்களுக்கு முக்கிய 5 பாடங்களை உள்ளடக்கிய கற்றல் கையேடுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கம்பளை கல்வி வலய பிரதிப் பணிப்பாளர் விஜயேந்திரன், வெண்கரம் அமைப்பின் பிரதான செயற்பாட்டாளர் மு.கோமகன், வெண்கரம் அமைப்பினர், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0