வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் தாக்குதலை அங்கீகரிக்கவே முடியாதாம்.!
வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் தாக்குதலை யாராலும் அங்கீகரிக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அவர்,
“அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாது. இது தொடர்ந்தால், எந்த நாடும் விருப்பப்படி மற்றொரு நாடு மீது படையெடுக்கலாம்.
இருப்பினும், வெனிசுவேலாவின் உள்நாட்டுப் பிரச்சினைகள் தற்போதைய நெருக்கடிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது.
வெனிசுவேலா தீவிர சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தியிருக்கக்கூடாது.
மாறாக, கடுமையான சோசலிசத்தை விட சமூக ஜனநாயகத்தைக் கடைப்பிடிக்கும் சீனா போன்ற நாடுகள் எடுத்த பாதையை வெனிசுவேலா பின்பற்றியிருக்க வேண்டும்.
நிலையற்ற தன்மை மற்றும் வெளிப்புற தலையீட்டைத் தவிர்க்க சமநிலையான பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் அவசியம்.” – என்றார்.