உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

இலங்கைக்கு சொந்தமான பல நாள் மீன்பிடி படகொன்று சீஷெல்ஸில் தீயிட்டு எரிப்பு!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
27 பார்வைகள்

இலங்கைக்கு சொந்தமான பல நாள் மீன்பிடி படகொன்று சீஷெல்ஸ் கடற்பரப்பில் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.சர்வதேச கடல் எல்லையை மீறி சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்டமையினால் தீயிட்டு எரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சீஷெல்ஸ் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி மீனவர்கள் 6 பேருடன் வென்னப்புவ கடலில் இருந்து பயணித்த இஷானி 1 என்ற மீன்பிடி படகு கடந்த 30 ஆம் திகதி சீஷெல்ஸ் பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டது

சர்வதேச கடல்எல்லையை மீறி சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்ட இலங்கை மீனவப்படகொன்று இலங்கை மீனவர்கள் 6 பேருடன் வெற்றிகரமாக கைற்றப்பட்டதாக சீஷெல்ஸ் பாதுகாப்பு பிரிவு தெரிவித்திருந்தது.இதனையடுத்து குறித்த மீனவப்படகினை தீயிட்டு எரிப்பதற்கு சீஷெல்ஸ் பாதுகாப்பு படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது

நாட்டின் இறைமை மற்றும் கடல்சார்சுற்றுச்கூழலை பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சீஷெல்ஸ் பாதுகாப்பு பிரிவு அறிக்கையின் ஊடாக தெரிவித்திருந்ததுஇதேவேளை இந்த விடயம் தொடர்பாக குறித்த மீனவப்படகின் உரிமையாளர் மற்றும் மீனவ சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0