உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மஹர சிறைச்சாலையின் முன்னாள் களஞ்சியக் காப்பாளர் உட்பட இருவர் தடுத்து வைத்து விசாரணை.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
20 பார்வைகள்

சிறைச்சாலையில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரால் பாரியளவில் முன்னெடுக்கப்பட்டு வந்த போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மஹர சிறைச்சாலையின் முன்னாள் களஞ்சியக் காப்பாளர் உட்பட இருவரையும் எதிர்வரும் 6ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பியகம காவல்துறையினர் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த மஹர மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்க, சந்தேகநபர்களைத் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி அளித்தார்.பியகம காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரி அஜித் விஜேசிங்கவின் ஆலோசனையின் பேரில், குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் ஐவர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இருவரிடமே தற்போது தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி,முன்னாள் களஞ்சியக் காப்பாளரிடமிருந்து 2 கிராம் 250 மில்லி கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டது.மற்றயவரிடமிருந்து 51 கிராம் 130 மில்லி கிராம் ‘ஐஸ்’ மற்றும் 51 கிராம் 650 மில்லி கிராம் ‘ஹெரோயின்’ போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் இருந்துகொண்டு இந்த போதைப்பொருள் வலையமைப்பை இயக்கி வரும் நபர் குறித்தும், இவர்களுக்கிடையிலான தொடர்பு குறித்தும் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காகவே இந்தத் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.பியகம காவல்துறை நிலையத்தின் உப காவல்துறை பரிசோதகர்கள் மற்றும் சார்ஜன்ட்கள் அடங்கிய குழுவினர் இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0