உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

விபத்துக்களில் ஐவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
20 பார்வைகள்

இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் பெண் ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, மாரவில – திசேராபுரவிலிருந்து அடப்பர சந்தி நோக்கிச் சென்ற உந்துருளி கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி ஒரு கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் உந்துருளி ஓட்டுநர் மற்றும் பின்னால் இருந்தவர் காயமடைந்து, மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் மாரவில பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞராவார்.

பெலவத்த – ஹொரவல வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மீகஹதென்னவிலிருந்து பெலவத்த நோக்கிச் சென்ற சைக்கிள், எதிர்த் திசையில் வந்த உந்துருளி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் உந்துருளி ஓட்டுநர் மற்றும் சைக்கிளோட்டி ஆகியோர் பலத்த காயமடைந்து மீகஹதென்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், மேலதிக சிகிச்சைக்காக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சைக்கிளோட்டி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் மத்தேகம மீகஹதென்ன பகுதியைச் சேர்ந்த 84 வயதுடைய வயோதிபராவார்.

ஹொரணை – கெஸ்பேவ வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹொரணையிலிருந்து கெஸ்பேவ நோக்கிச் சென்ற கப் ரக வாகனம், வீதியைக் கடக்கும் பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த பெண் பிலியந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பொல்கஸ்ஸோவிட்ட பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய குடும்பப் பெண்ணாவார்.

பேருவளை புனித அன்னாள் வீதி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பேருவளை பெரேரா மாவத்தை திசையில் இருந்து பயணித்த உந்துருளி கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சுவரில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உந்துருளி ஓட்டுநர் காயமடைந்து பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பேருவளை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞராவார்.

நொச்சியாகம – தல்கஸ்வெவ வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நொச்சியாகம நோக்கிச் சென்ற உந்துருளி, எதிர்த் திசையில் வந்த உந்துருளி மீது நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் உந்துருளி ஓட்டுநர்கள் இருவரும் காயமடைந்து நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தல்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய குடும்பஸ்தராவார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0