ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது.!
பேலியகொடை – இகினிகஹாபில்லாயாவ பகுதியில் நேற்று சனிக்கிழமை (03) பிற்பகல் ஐஸ் போதைப் பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் களனி மற்றும் கொழும்பு 08 பகுதிகளைச் சேர்ந்த 22, 24 மற்றும் 31 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
3 சந்தேக நபர்களிடமிருந்தும் 02 கிலோகிராம் 27 கிராம் ஐஸ் போதைப்பொருள், 71 கிராம் 880 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 01 கிராம் 720 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.