உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கொஹுவளை துப்பாக்கிச் சூடு; சிக்கிய சந்தேக நபர்கள்.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
21 பார்வைகள்

கடந்த 30ஆம் திகதி கொஹுவளை – போதியாவத்த பகுதியில் 16 வயது சிறுமியை சுட்டுக் காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் தெஹிவளைப் பகுதியைச் சேர்ந்த 25, 28, 33 மற்றும் 45 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய உந்துருளி ஓட்டுநர், துப்பாக்கியை வைத்திருந்த நபர், துப்பாக்கியை கொண்டு சென்ற நபர் மற்றும் சந்தேக நபர்களுக்கு தங்குமிடம் வழங்கிய மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிசை பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் நேற்று சனிக்கிழமை (03) தெஹிவளை – களுபோவில பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு கொஹுவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 03 ரிவால்வர் ரக துப்பாக்கிகள், 09 மில்லிமீற்றர் தோட்டாக்கள் பத்து, 50 கிராம் ஹெரோயின், 55 கிராம் ஐஸ் மற்றும் 02 மோட்டார் சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதலின் விளைவாக நடந்ததாக ஆரம்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொஹுவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0