மருதங்கேணியில் குடும்பஸ்தர் கொ*லை; பிரதான சந்தேக நபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!
யாழ். வடமராட்சி கிழக்கு, மருதங்கேணிப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அந்தப் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபருக்கு நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுவருட தினமான கடந்த வியாழக்கிழமை மருதங்கேணிப் பகுதியில் சின்னையா தவநேசன் (வயது 40) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.
விசாரணைகளைத் தீவிரப்படுத்திய பொலிஸார், அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரை பிரதான சந்தேகநபராகக் கைது செய்து கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தினார்கள்.
இதையடுத்தே, அந்த நபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.