உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கிண்ணியாவில் மோட்டார் சைக்கிளுடன் வான் மோதி விபத்து! ஒருவர் படுகாயம்!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
22 பார்வைகள்

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணியா துறை அடி சந்தியில் வானும் மோட்டார் வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த விபத்தானது இன்றையதினம்(3.1.2026) கிண்ணியா துரையடி வீதியிலிருந்து திருகோணமலை_மட்டக்களப்பு பிரதான வீதிக்கு செல்லும் சந்தியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், காயத்துக்கு இலக்காகியவர் கிண்ணியா தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வாகனங்களை கைப்பற்றி கிண்ணியா பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பியுள்ளனர்.

மோட்டார் வண்டி பலத்த சேதத்துக்கு உள்ளாகி காணப்படுவதுடன் வானின் முற்பகுதியும் கடுமையாக சேதத்துக்குள்ளாகியுள்ளது.மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0