உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மதுபான உரிமத்தை இரத்துச்செய்யகோரி பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டம்!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
19 பார்வைகள்

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டத்திற்கு அருகாமையில் வெஞ்சர் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் மதுபானக் கடையின் உரிமத்தை உடனடியாக இரத்து செய்யக்கோரி, தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பட்டமானது, இன்று(3.1.2026) காலை 9.00 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில், வெஞ்சர் பகுதியில் அமைந்துள்ள மதுபானக் கடைக்கு வழங்கப்பட்ட உரிமம் ஏற்கனவே காலாவதியாகி விட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதிகாரிகள் உரிமத்தை புதுப்பிக்கக்கூடாது, அதனை உடனடியாக இரத்து செய்து, மதுபானக் கடையை அந்த இடத்திலிருந்து அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.குறித்த பகுதியில் கோயில், பள்ளிவாசல் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியன மதுபானக் கடைக்கு அருகில் அமைந்துள்ளதால், மத விழாக்கள் மற்றும் பொது நடவடிக்கைகளின் போது தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த மதுபான சாலை காரணமாக புலமைப்பரிசில் தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெறும் குழந்தைகள் கூட க.பொ.த சாதாரண தரத் தேர்வில் தோல்வியடையும் நிலை ஏற்படுவதாக பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.குறிப்பிட்ட சிலர் புத்தகங்களை விற்று மது வாங்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். இதனால் குறித்த பகுதியில் உள்ள இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி விட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த மதுபானக் கடை, பகுதியில் உள்ள மக்களின் அமைதியை சீர்குலைத்துள்ளதாகவும் இந்த அமைதியற்ற சூழல் கடந்த காலங்களில் உயிர் இழப்புகளுக்கு வழிவகுத்ததாகவும் தோட்டத் தொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.இந்த மதுபானக் கடை எங்கள் கிராமத்திற்கு ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. இந்த கடையின் உரிமம் ஏற்கனவே காலாவதியாகி விட்டது.

எனவே, ஜனாதிபதி உடனடியாக தலையிட்டு இந்த உரிமத்தைப் புதுப்பிக்காமல் இரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த நிலையில், நோர்வுட் பிரதேச சபையின் இரு கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் குழு ஆகியன குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0